Saturday, April 24, 2010

சிறகுகள் விரியும் போது ...

சோகமெல்லாம் கூட
சுகமாகுமடி
நின்
நினைவுகள்
என் இதய சிறையினில்
சிறகு விரிக்கும் போதெல்லாம் ...

என் வாழ்வின்
வழி பாதை எல்லாம்
நின் விழி பாதை தேடியே
பயணிதுக்கொண்டிருகிறது
ஓவ்வொரு விடியலிலும் ...

மின்னல் கோடுகள் ...



வீதியோரத்தில் கண்டேன்
ஒரு மின்னலை !
பறிபோனது
விழிகள் மட்டுமல்ல
என் நினைவுகளும் ...

வழிபாதை செல்ல மனமின்றி
அவள் விழி பாதை
செல்லும் கால்கள்
முடிவின்றி நீள்கிறது நித்தமும்..

Thursday, April 1, 2010

வணக்கம் தமிழ் கூறும் நல் உலக பெருமக்கள் அனைவருக்கும்